நேற்று விருதுநகர் மண்டலத்தைச் சேர்ந்த Branch managersக்கான review meeting நமது தலைமையலுவலகத்தில் நடைபெற்றது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என நிர்வாகம் நம்மையும் அழைத்திருந்தது. இது ஒரு ஆரோக்கியமான நடைமுறையாகவே நாம் கருதுகிறோம். “we are not oppossite parties, we are coailition parties" என்று நமது சேர்மன் சென்றமுறை பேச்சுவார்த்தையில் நம்மிடம் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் இதுவென புரிந்து கொள்கிறோம். PGBEA சார்பில் தோழர்.மாதவராஜும், PGBOU சார்பில் தோழர் விஸ்வநாதனும் கலந்துகொண்டனர்.
மீட்டிங்கின் ஆரம்பத்தில் சேர்மன், நடந்து முடிந்த காலாண்டு (ஏப்ரல் - ஜூன் 2011) கணக்கில், நமது டெப்பாசிட் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளையும், தாக்கங்களையும் எடுத்துரைத்தார். நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறோம் என்பதே அவரது உரையின் சாராம்சமாக இருந்தது. Advancesல் jewel loanகளே அதிகமாய் இருப்பதையும், 86 சதவீதமாக இருக்கும் அதனை 75 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது நமகு இலக்கு என்பதையும் எடுத்துரைத்தார். இதன் அர்த்தம் நகைக்கடனை குறைக்க வேண்டும் என்பதல்ல, மற்ற கடன்களை, குறிப்பாக easy loan போன்றவைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே என தனது நிலைபாட்டை தெளிவு படுத்தினார். Branch managerகள் வெளியே செல்ல வேண்டும், canvass செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நமது இலக்குகள் தெளிவானவை என்றும், நாம் முயற்சி செய்தால் அடையக்கூடியவை என்பதையும் மீண்டும் மீண்டும் விளக்கினார்.
தொடர்ந்து, அந்த மீட்டிங் ஹாலிலேயே, ஒவ்வொரு Branch manager களிடம், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, அவர்கள் எவ்வளவு achieve செய்திருக்கிறார்கள், குறிப்பிட்ட காலவரம்பிற்குள் இலக்கையடைய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என review செய்யப்பட்டது.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளைப் பேச அழைத்தார்கள். PGBWU சார்பில் அதன் பொருளாளர் விவேகானந்தன் முதலில் பேசினார். வழக்கம்போல் , அவர்களுக்கே உரித்தான பாணியில் வழவழ கொழகொழவென்றிருந்தது.
PGBEA சார்பில் தோழர்.மாதவராஜ், இதுபோன்ற கூட்டங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு தோன்றியதற்கு, முதலில் சேர்மனுக்கு நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். இந்தக் கூட்டம் oneway traffic போல இருப்பதாகவும், managers தங்கள் தரப்பிலிருந்து உண்மைகளை உடைத்துப் பேசாமல் இறுக்கத்தோடு இருப்பதாகவும் ஒரு observer ஆக தனக்குத் தோன்றுவதாகச் சொன்னார். Managerகளே ground levelல் பணிபுரிந்து அதன் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவர்கள் என்றும், இலக்குகளை விஞ்ஞான பூர்வமாக வடிவமைக்க வேண்டியவர்கள் நிர்வாகம் என்றும், இந்த இருமுனைகளும் சந்தித்து தீர்வு கண்டு, மேலும் முன்னேறும் இடமாக managers மீட்டிங் இருக்க வேண்டும் என்று விளக்கினார். அதற்கு வெளிப்படையான உரையாடல்கள் அவசியம் என்பதை வலியுறுத்தினார். ஒவ்வொருவரிடமும் பலமும் இருக்கிறது, பலவீனமும் இருக்கிறது என்றவர் அதனை சரி செய்வதும், , சமன் செய்வதுமே இதுபோன்ற appraisalகளின் தன்மையாக இருக்க வேண்டும் என்றார். ‘நான் சரியாக perform செய்யவில்லை, அதனால் எனக்கு தூரத்தில் transfer போட்டு இருக்கிறார்கள்’ என சம்பந்தப்பட்டவரே convince ஆகுமளவுக்கு நிர்வாகத்தரப்பில் transparencyயும், impartialityயும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த குறிப்பிட்ட காலாண்டில் ஆள் பற்றாக்குறையாலும், பணி நெருக்கடியாலும் வாடிக்கையாளர் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதையும் அதுவே, வங்கியின் வளர்ச்சிக்கு தடைகல்லாக இருந்ததையும், புதிய Recruitment மூலம் அந்த நெருக்கடி ஒரளவுக்கு தீர்ந்து போக இருப்பதால், நாம் இலக்குகளை அடைய சாத்தியங்கள் அதிகமாகி இருக்கின்றன எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
PGBOU சார்பில் தோழர் விஸ்வநாதன் பேசும் போது, managerகளுக்கு சமீப ஆண்டுகளில் நடந்த பணி ஓய்வுகள் கடுமையான பயத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். எப்போதோ அவர்கள் கொடுத்த கடன்களின் தன்மையால், அவர்களுக்கு பணி ஓய்வில் கிடைக்க வேண்டிய தொகை பிடித்தம் செய்யப்படுவதால், managers பாதுகாப்பான கடன்கள் மட்டுமே கொடுத்து நிம்மதியாக பணி ஓய்வு பெறுவோம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்றார். அவர்களுக்கு ஆதரவும், நம்பிக்கையும் அளித்து உற்சாகப்படுத்த வேண்டியது நிர்வாகம் என்றார்.
தொடர்ந்து பேசிய சேர்மன், தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் வெளிப்படையான பேச்சுக்களை நிர்வாகம் வரவேற்பதாகவும், இதனால் மறைந்திருக்கும் சில உண்மைகள் புலப்படுவதாகவும், அது நிர்வாகத்திற்கு வருகிற காலங்களில் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். பணிபுரியும் வசதிகளை (comfort) ஏற்படுத்தித் தர வேண்டியது நிர்வாகம் என்பதை ஒப்புக்கொண்டவர், கடந்த காலங்களில் அந்த comfortஐ முழுமையாக நிறைவேற்ற இயலாத சூழல் நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கலாம் என்றதோடு, அதே சமயம் கிடைத்த comfortக்குரிய பணிகளை நாம் செய்திருக்கிறோமா என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதும் அவசியம் என்றார்.
விருதுநகர் வட்டார மேலாளர் திரு.நெடுஞ்செழியன் கிளைகளில் managers செய்ய வேண்டிய பணிகளை தொகுத்துச் சொன்னதோடு, கூட்டம் நிறைவுற்றது. நமக்கு இது ஒரு புதிய அனுபவம்தான்.