வரும் 15.4.2012 ஞாயிற்றுக்கிழமை, மெஸஞ்சர்களிலிருந்து எழுத்தர் பதவி உயர்வுக்கான தேர்வு மதுரையில் நடக்க இருக்கிறது.
வழக்கம் போல் தேர்வினை வெற்றிகரமாக எழுதுவதற்கான ஒருநாள் பயிற்சி அளிக்க நமது சங்கம் PGBEA ஏற்பாடு செய்திருக்கிறது.
வரும் 14.4.2012 , சனிக்கிழமை மதுரையில் வைத்து பயிற்சி அளிக்கப்படும். ஆங்கிலம் மற்றும் கணிதம் தேர்வுகளை எளிய முறையில் புரிந்து கொள்ள இந்த பயிற்சி நிச்சயம் உதவும். அதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் வந்து பாடம் நடத்துவார்கள்.
இடம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
11, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி
பார்க் பிளாசா ஓட்டல் எதிரே
மதுரை.
நேரம்:
காலை 9.30 மணிக்குத் தொடங்கும்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்தே வந்துவிடலாம். மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு அங்கேயே தங்கி, அடுத்தநாள் தேர்வினை எழுதுவதற்கு தயாராக தோழர்கள் வரலாம்.
இணையத்தில் படிக்கிற தோழர்கள், பிரமோஷனில் பங்கு பெறும் நம் மெஸஞ்சர்த் தோழர்களிடம் இச்செய்தியினை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வருகிற தோழர்கள் முன்கூட்டியே தகவல் தந்தால், உதவியாக இருக்கும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
தோழர். M.சோலைமாணிக்கம் - 9443373135
தோழர்.J.மாதவராஜ் - 9443866719
தோழர்.G.சுரேஷ்பாபு - 9443861720
தேர்வினை வெற்றிகரமாக எழுத, அனைவரையும் நம் சங்கங்கள் வாழ்த்துகின்றன.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!